world

img

தென் கொரியா ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக் கட்சி தலைவர் லீ ஜே- மியூங் வெற்றி

தென் கொரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 98.1 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் லீ ஜோ-மியூங் 49.20 சதவிகித வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.அவருக்கு அடுத்தபடியாக மக்கள் சக்திக் கட்சித் தலைவர் கிம் மூன் சூவுக்கு 41.46 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இனி ஜோ-மியூங்கை, கிம் மூன் சூ முந்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தேர்தலில் ஜோ-மியூங்கின் வெற்றி உறுதியாகியுள்ளது.

தென் கொரிய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டிய அவசியமில்லை. அதிகபட்ச வாக்குகளைப் பெற்றாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின் யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயக் கட்சியுடன் நீடித்துவந்த கருத்து  வேறுபாடு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் அவசர நிலையை அறிவித்தார்.

கடும் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பை அவர் பின்னர் திரும்பப் பெற்றாலும், அவர் பதவீ நீக்கம் செய்யப்பட்டார். இந்த அவசரநிலை அறிவிப்பு சட்டவிரோதம் என்று கூறி அரசியல் சாசன நீதிமன்றமும் யூன் சுக் யோலை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கியது.

இதனையடுத்து, நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றுள்ளார்.